செய்திகள்

விகேபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் 107 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்குதல், வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வாய்ப்பு, வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் பகுதி 2 கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகஸ்தியராஜன் தலைமை வகித்தார். சுரேஷ் பாபு, ரவீந்திரன், இசக்கி ராஜன் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாற்றுத் திறனாளிகள் உள்பட 107 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button