கோக்கு மாக்கு

இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தும் வாயை திறக்காததால் போலீசார் அதிர்ச்சி

தூத்துக்குடி கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் மன்னன் தப்பித்து செல்வதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைஅடுத்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உதவி ஆய்வாளர் ஜீவமணி உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு திரேஸ்புரம் பகுதி கடற்கரையில் பதுங்கி இருந்தனர். 10ம் தேதி இரவு மணி 11.30 மணிஅளவில் ஒரு நாட்டுப்படகில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தப்பிச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்து படகிலிருந்து வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்‌. அவரை அங்கிருந்து கியூ பிரிவு போலீசார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கியூ பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர் அதில் அவர் வாயை திறக்காமல் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மேலும் அவரிடம் இருந்த இந்திய நாட்டின் பணம் 2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் இலங்கை, கனடா, நாட்டு பணம் மற்றும் இரண்டு ஐபோன் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர் ஐபோனை ரகசிய எண்களால் லாக் செய்து வைக்கப்பட்டதால் அலைபேசியில் இருந்து அவர் யாரிடம் தொடர்பு கொண்டார் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்‌. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனத்தான் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரபல ஜிஆர்டி ஹோட்டலில் தங்கி உள்ளார் அங்கிருந்து திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கை தப்பிச் செல்ல திட்டமிட்டு தெரியவந்தது.

ஜோனத்தான் மீது 2018 ஆம் ஆண்டு மும்பை மத்திய புலனாய்வு வருவாய் துறை போலீசார் போதை கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது தெரிய வந்தது அப்போது ஜோனத்தானிடம் அவர்கள் விசாரணை நடத்தியபோது மௌனம் சாதித்து அவரிடம் இருந்த லேப்டாப் பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து வைத்ததால் போலீசார் கடுமையான விசாரணைக்கு பிறகு ஜோனத்தான் பேச வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது ஜோனத்தானை கைது செய்ய அப்போது மத்திய புலனாய்வுத்துறை போலீசார் ஆப்ரேஷன் விட்டமின் என பெயரிட்டு இவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கியூ பிரிவு போலீசார் ஜோனத்தானை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்த பிறகு தூத்துக்குடி ஜெயம் எண்1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் நீதிபதி வரும் 26ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தூத்துக்குடி கடற்கரையில் பிரபல கடத்தல் மன்னன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button