கோக்கு மாக்கு

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க… அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இதற்கு மத்தியில் கொரோனா குறையாததால் இந்த வருடமும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடக்க இருக்கிறது. ஆன்லைனில் குழந்தைகள் படிப்பதால் கண் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவர்களை வர வழைத்து கண் கண்ணாடியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button