ஆன்மீகம்செய்திகள்

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் உள்ள செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட கோரிய வழக்கு..

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தேனியை சேர்ந்த முருகேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு..

சங்கரன் கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் உள்ளது இந்த கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.

பருவக்குடியில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கடைகள் அமைத்து வியாபாரம் நடக்கிறது . “ஆக்கிரமிப்பாளர் , எனக்கு அரசியல் , ஆள் பலம்” உள்ளது , என மிரட்டுகிறார். தென்காசி மாவட்ட ஆட்சியர் , சங்கரன்கோவில் அறநிலையத்துறை ஆய்வாளருக்கு மனு அனுப்பினோம், நடவடிக்கை இல்லை,உரிய நடவடிக்கை எடுக்க பரிசலிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது..
கோயில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து
ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும்.
பின்னர் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button