செய்திகள்

சங்கரன்கோவில் பிரபல நூற்பாலையில் தீ விபத்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் கிராமத்தில் பிரபல தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பலத்த சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஆலையின் உள்ளே பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். ஆலையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கரன்கோவில், கழுகுமலை, வாசுதேவநல்லூர் பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சத்தம் கேட்டதும் பணியாளர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் குறித்து குருவிகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூற்பாலை இயந்திரங்கள் மற்றும் நூற்பாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நூல் மற்றும் பஞ்சு ஆகிய பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button