க்ரைம்செய்திகள்

கோவில்பட்டி அருகே வாலிபர் தலை துண்டித்து வெட்டி படுகொலை : போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த பொய்யாழி என்பவரது மகன் மதன்குமார் (21). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவ்வப்போது சமையல் வேலைக்கும் செல்வது உண்டு. நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே கிளம்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் மதன்குமார் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் மதன்குமாரை தேடியுள்ளனர். ஆனால் மதன்குமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு காட்டுப் பகுதியில் ஒரு வாலிபர் கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதையெடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது காணாமல் போன மதன்குமார் என்பது தெரியவந்துள்ளது. வேலைக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button