செய்திகள்

அரிவாளோடு பாட்டு போட்டு குத்தாட்டம் போட்ட நபர் : காவல்துறையில் குத்தவச்சு இருக்கிறார்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் பாட்டு போட்டு அரிவாள் வைத்து ஆடிய தோடு அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது

பாட்டு போட்டு அரிவாள் வைத்து ஆடி, அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் சுப்பையா (30) என்பவர்) அவரது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் வைத்து பாட்டு போட்டு ஆடியதுடன் அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button