*(மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் செய்திகள் இன்றைய செய்தி) :- 03-08-2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியினை பார்வையிட்டேன்.*
*தொடர்ந்து, இவ்விடத்தில் தனியாரால் நடத்தப்பட்டு வந்த பள்ளிக்கூடம் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது இந்து சமய அறநிலையத்துறையே பள்ளிக் கூடத்தை நடத்த முன்வந்துள்ளது. மாணவர் சேர்க்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 180 பேர் கூடுதலாக விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகளின் வசதிக்காக புதிய கல்லூரிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துக் கொண்டேன்..!!✍🏻💐👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻*
உடன் அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன், திரு.பரந்தாமன் எம்.எல்.ஏ..!!