ஆன்மீகம்டிரெண்டிங்
Trending

சங்கரன்கோவில் கோவிலை பூட்டியதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்த்தி கடன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய எட்டாம் தேதி வரை அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவில் நுழைவாயில் முன்பு தடுப்புகள் போடப்பட்டு பக்தர்கள் கோவில் நுழைவு வாயிலில் நெருங்காத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணியினர் இன்று சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மாவிளக்கு எடுத்து தீபாராதனை காட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button