செய்திகள்

மதுரையில் மணமக்களுக்கு மணக்கும் மலர் முகக்கவசம்: பூ கட்டும் கலைஞரின் புது முயற்சி

மதுரையில் திருமணங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மணமக்களுக்கு மணக்கும் மலர்களில் முகக்கவசம் செய்து அசத்தியுள்ளார் மதுரை சுவாமி சன்னதியில் பூக்கட்டும் கலைஞர் மோகன் 40.

மணமக்கள் பலர் திருமணத்தின் போது வெறும் முகக்கவசம் மட்டுமே அணிந்தால் பார்க்க நன்றாக இருக்காது. மணமாலையுடன் மலர் முகக்கவசம் அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஒரு ஐடியா தோன்றியது. மணமக்களே முகக்கவசம் அணிந்திருக்கும் போது நாமும் அவசியம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அங்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கும் வரும். திருமண மாலை ஆர்டர் செய்தவர்களுக்கு இலவசமாக கொடுக்க திட்டமிட்டு கொடுத்து வருகிறேன் என்றார்.

இது போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இதோடு நான் சந்திக்கும் நபர்களிடம் கொரோனா தாக்காமல் இருக்க சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல், குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

பூக்கட்டும் கலைஞரின் வித்தியாசமான இந்த முயற்சிக்கு மக்களிடத்திலே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button