செய்திகள்

திருமங்கலத்தில் பதுக்கப்பட்ட 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது

* திருமங்கலம்ஆக, 13- திருமங்கலத்தில் ஹோட்டல்களுக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிரு 1800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மதுரை திருமங்கலம் ராஜாஜி 9 தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர் அப்போது அங்கு 1,800 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அரிசி பதுக்கி வைத்த கணேசன் வயது 50 என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் இந்த விசாரணையின் திருமங்கலம் பகுதியில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கு பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்திருந்தது இதனையடுத்து போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button