செய்திகள்விளையாட்டு

34 தூத்துக்குடி மாணவர்கள் உலக சாதனை :75மணி நேரம் ஸ்கேட்டிங் : யூனிகோ வேல்டு தொடர் உலக சாதனை!

தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் சக்தி விநாயகர் இந்து  வித்யாலையாவில் கிரிடி ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வுக்காக நடத்திய தொடர் ஸ்கேட்டிங் விளையாட்டில் 34மாணவர்கள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 18 வரை தொடர்ந்து இடைவிடாமல் ஸ்கேட்டிங் விளையாடி உலக சாதனை படைத்து உள்ளனர்.

இந்த விழாவை சக்திவிநாயகர் இந்து வித்யாலையா விவேகம் ஆனந்த் கடந்த 15ம் தேதி துவங்கி வைத்தார் தொடந்து 75 மணி நேரம் ஆகஸ்ட் 18ம் தேதி இன்று வரை தொடர்ந்து நடைபெற்றது. இறுதி நாளான இன்று சாதனை படைத்த மாணவர்வளுக்கு யூனிகோ வேல்டு மேனேஜிங் இயக்குனர் சிவராமன் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இதற்கு முன்னதாக 545 மாணவர்கள் 45 மணி நேரத்தில் செய்யப்பட்ட உலக சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. விழாவில் சிப்காட் தாசில்தார் செல்வகுமார், கிரிடி அகாடமியை சாந்த விஜய், மாஸ்டர் ராஜேஸ் பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button