செய்திகள்

பசுவிற்கு நீதி வழங்கிய நாட்டில் பசுவை அரிவாளால் வெட்டிய அரக்கன்

சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் நெற் பயிரை மேய்த பசு மாட்டை அரிவாளால் வெட்டிய இருவர் கைது.பாதிக்கபட்ட விவசாயி கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலிசார் நடவடிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி,பாலசுந்தரம் மன்மதன், சுபாஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது,ஆத்திரமடைந்த ரவி,பாலசுந்திரம் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பசு மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதியை அரிவாளால் வெட்டி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பசுமாடு ரத்தம் ஒழுகிய படி நின்றுள்ளது.இதனைப் பார்த்த அண்ணாதுரை அதிர்ச்சியடைந்தார் மேலும் இதுதொடர்பாக மாட்டின் உரிமையாளர் அண்ணாதுரை வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வயலின் உரிமையாளர்களான ரவி, பாலசுந்தரம் உள்ளிட்டோரை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாதுரைக்கு சொந்தமான பசுமாடு அவர்களது வயலில் மேய்ந்து பயிர்களை நாசம் ஆக்கியதாகவும் இது தொடர்பாக பலமுறை அண்ணாதுரையிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாததால் ஆத்திரத்தில் மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதியை துண்டித்த தாகவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ரவி பாலசுந்தரம் மன்மதன் சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button