செய்திகள்தொழில்நுட்பம்

சென்னையில் இந்திய அளவில் முதல்முறையாக உலக சாதனை பறக்கும் சாலை

இந்தியாவிலேயே முதன்முறையாக 2 அடுக்கு சாலையாக மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை அமைக்க உள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடைந்த பிறகு சாலைப் பணிகள் தொடங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில் நுட்பத்துடன் இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் பேருந்துகள்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிச் சாலையாக மாற்றப்படும். இந்த ஆறு வழி சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயில் இருந்து துறைமுகம் வரை செல்லும். அந்த சாலையில் கன்டைனர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

மொத்தம் 10 வழி சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றது போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி பறக்கும் சாலையில் 7 உள்நுழைவு, ஆறு வெளியேறும் வழிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் மூன்று மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளில் பயண நேரம் 30 நிமிடமாக குறையும். அதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button