செய்திகள்

நாகை அருகே கல்லூரி பேருந்தை கடத்திய வாலிபர்கள் கைது

நாகை மாவட்டம் பாப்பாகோவிலிலுள்ள காலேஜ் பேருந்தானது திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவாளம்பேட்டை பகுதியில் நின்றது. அந்தப் பேருந்து கடந்த 28-ம் தேதி காணாமல் போனது குறித்து டிரைவர் ராஜசேகரன் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பேருந்து தஞ்சையை நோக்கி செல்வது தெரியவந்தது. இந்நிலையில் திருச்சி திருப்பாயத்துறை நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காலேஜ் பேருந்தை வழிமறித்தனர்.

அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அதில் இருந்த 4 பேர் பேருந்தில் இருந்து இறங்கி அடித்து பிடித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து திருச்சி காவல்துறையினர், நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பேருந்தை மீட்டனர். இதனையடுத்து பேருந்தை கடத்திவர்களை பிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனிப்படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். இந்நிலையில் கல்லூரி பேருந்தை கடத்தியவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருப்பது நன்னிலம் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

அதன்பின் போலீஸ் இன்ஸ்பெக்டரான சுகுணா மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அறிவொளி நகர் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருக்கன்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த சத்தியஸ்ரீராம், பல்லடம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார், அஷ்ரப், சதீஷ்குமார் என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து தனியார் கல்லூரி பேருந்தை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button