செய்திகள்

சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் உள்ள காந்தி சிலைக்கு இன்று (2ம் தேதி) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளைத் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை; மறுபரிசீலனையும் இல்லை.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிய முடியாது என்பதால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

#visilmedia #todaynewstamil #topnewstamil #schoolreopen #tamilnadu #tamilnadueducation #educationminister #anbilmaheshpoyyamozhi

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button