செய்திகள்டிரெண்டிங்
Trending

ஆட்கொல்லி புலியை தேட களமிறங்கும் சிப்பிப்பாறை நாய்

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற சந்திரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது.

அதைத்தொடர்ந்து, அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி தேவர் சோலை பஜாரில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைத் தொடர்ந்து, புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர். கூண்டு வைத்தும், மயக்க ஊசி செலுத்தியும் அந்தப் புலியை பிடித்துக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில், புலி அங்கிருந்து மேபீல்ட் எஸ்டேட் பகுதிக்குச் சென்று விட்டது. அங்கு ஒரு மாட்டையும் கொன்றுவிட்டது. இதையடுத்து வனத்துறை குழுவினர் மேபீல்ட் பகுதிக்குச் சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் இந்தத் தேடுதல் வேட்டையில், தற்போது சிப்பிப்பாறை என்ற பெயர் கொண்ட நாட்டு நாய் பயன்படுத்தப்படுகிறது. புலியை கண்டறியும் பணியில் நாட்டு நாய் ஒன்று ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

#visilmedia #todaynewstamil #topnews #tiger #tamilnadu #புலி #சிப்பிப்பாறை #நீலகிரி #ஆட்க்கொல்லிபுலி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button