செய்திகள்
Trending

ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்கவேண்டும்!! காங்.எம்எல்ஏ பிரதமருக்கு கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தின் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் பரத் சிங் குண்டன்பூர். இவர், சமீபத்தில் கொண்டாடப்பட்ட மகாத்மா காந்தியின் 152வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது; “நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை நாடு முழுதும் உள்ளது. மக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்கள் நிறைவேற்ற பழகிவிட்டனர். கடந்த 2019 ஜன.1ம் தேதி முதல், 2020 டிச.31 வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது, தினமும் இரண்டு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லஞ்சமாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் கொடுக்கப்படுகின்றன; இது, ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு செய்யும் அவமரியாதை என்று தான் கூற வேண்டும். அதனால், 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும். அதேபோல், அசோக சக்கரத்தின் படத்தையும் நீக்க வேண்டும்.

ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் 5, 10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளில் மட்டும் மகாத்மா காந்தி படத்தை அச்சடித்தால் போதும். இதுதான் மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்” என கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #Gandhi #modi #indianrupees #சிறப்புசெய்திகள் #காந்திபடம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button