செய்திகள்

காவல்துறையில் கருப்பு ஆடுகள் : களை எடுக்கும் டிஐஜி

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராக பணி புரிந்துவரும் திரு.அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். மேற்படி சார்பு ஆய்வாளர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்காக கோவை சரக துணை தலைவர் (DIG)அவர்களின் ஆணையின் படி சார்பு ஆய்வாளர் திரு.முருகன் என்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்
#காவல்துறை #டிஜிபி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button