செய்திகள்

பெண்ணிற்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு : பெண் மற்றும் மகன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!!!

தனது நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி பெண் தனது மகனுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் ராஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 1800 சதுர அடி நிலத்தில்
டீக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ்..
கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டீக்கடை வைத்திருந்த நிலத்தின் பெரும் பகுதியை வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து வருவாய்த் துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பத்து வயது மகன் ஜெய்சனுடன் வந்த வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மனைவி சத்தியவாணி, தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #மாவட்டஆட்சியர்அலுவலகம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button