அரசியல்
Trending

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட பாஜக முக்கிய பிரமுகர்…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , முன்னாள் முதல்வர் கருணாநிதி, மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் .

பாஜக பிரமுகரான கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்தார் . இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு . க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டார் .

மேலும் திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியுள்ளார்.

இந்நிலையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அதில் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்துவர் ஷர்மிளாவை ஆகியோரை குறித்து ஆபாசமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட கல்யாணராமனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பாஜக #bjp #tamilnadu #mkstalin #dmk

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button