செய்திகள்

13 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றுவிட்டோம்… ஐஜி.விஜயகுமார் தகவல்…

காஷ்மீரில், பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள் 9 என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்” என, ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் பெண் முதல்வர் என 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் பொதுமக்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டது காஷ்மீர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் நேற்று (16ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், 9 என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் 3 பயங்கரவாதிகளை நாங்கள் சுட்டுக் கொன்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #காஷ்மீர் #பயங்கரவாதிகள் #இந்தியராணுவம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button