செய்திகள்

இனி பிறந்த நாளை இப்படி கொண்டாட தடை..!

பிறந்தநாள், திருமணநாள் மாதிரியான வாழ்வின் மிகமுக்கியமான கொண்டாட்ட நாட்களில் பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம்.

அன்றைய தினம், அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம்.

இந்நிலையில், திரையுலக பிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை விதித்துள்ளது கர்நாடக அரசு. இந்தத் தடை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநபர்கள் தங்கள் பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடும்போது அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகக்கூடும். அதனால், குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்ற கண்ணோட்டத்தில் இந்தத் தடையை அரசு கொண்டு வந்துள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த தடைக்கு கர்நாடக மாநில மக்கள் கலவையான ரியாக்ஷனை கொடுத்துள்ளனர். ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் கல்வி சார்ந்த எதார்த்த பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண முன்வர வேண்டும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பிரபலங்கள் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதும், பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதும் மனோ ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது அவர்களது வாதமாக உள்ளது. இதைத்தான் உளவியல் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பிறந்தநாள் #பிறந்தநாள்கொண்டாட்டம் #அனாதைஇல்லம் #கர்நாடகஅரசு #Karnataga #BirthdayCelebration

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button