செய்திகள்

தீப்பெட்டியின் விலை உயர்வு!!

தீப்பெட்டிகள் தாயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக, ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி வந்தது. தற்போது, மூலப்பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், லாரி வாடகை ஆகியவை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அதன்படி, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில், டிசம்பர் 1-ம் தேதி முதல் 50குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறுகையில் :

கடந்த 1995-ம் ஆண்டு 50 பைசாவாகவும், 2007-ம்ஆண்டு ரூ.1 எனவும் தீப்பெட்டி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்த்தப்படவில்லை. அக்.10-ம் தேதிக்குப் பின்னர், பொட்டாசியம் குளோரேட் ரூ.63-ல் இருந்து ரூ.78, சல்பர் ரூ.24-ல் இருந்து ரூ.31, மெழுகு ரூ.58-ல் இருந்து ரூ.80, சிவப்பு பாஸ்பரஸ் ரூ.425-ல் இருந்து ரூ.810 என மூலப்பொருட்கள் கடுமையான விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. எனவே, 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ.2-க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #தீப்பெட்டி #தீப்பெட்டி_விலையேற்றம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button