செய்திகள்
Trending

யாரு சாமி நீ!!மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய கணவன்!!

மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய கணவன்!!

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பதற்காக 26 வயது மனைவியை விலைபேசி விற்றிருக்கிறார் 17வயது கணவன்.

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்படா பகுதியில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் கூலித் தொழிலாளிகளாக இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளை வேலைக்கு சென்றிருக்கின்றனர்.

செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த போது, ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் அந்த 17 வயது சிறுவனுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அந்த முதியவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றிருக்கிறார்.

அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டு வந்திருக்கிறார். தான் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கியிருக்கிறார். மிச்ச பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார் அந்த சிறுவன்.

கணவனும் மனைவியுமாக சென்றவர்கள் தனியாக வந்து நிற்கிறாயே என்று ஊராரும் குடும்பத்தினரும் கேட்க, மனைவி தன்னை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என்று கவலையுடன் சொல்லி இருக்கிறார் அந்த சிறுவன். பெண்ணின் குடும்பத்தாருக்கு அந்த சிறுவன் சொன்னதில் நம்பிக்கை இல்லை.

இதையடுத்து பலங்கிர் மாவட்டம் பெல்படா போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அந்த சிறுவனை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில். தன் மனைவியை வேறு ஒருவருக்கு விற்று விட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து ஒடிசா போலீசார் அப்பெண்ணை மீட்பதற்காக ராஜஸ்தான் பாரன் மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றனர். பாரன் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்று அப்பெண்ணை மீட்கச் சென்றபோது, உள்ளூர் மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து கொண்டு விட்டனர்.

அந்தப் பெண்ணுக்காக 1.8 லட்சம் கொடுத்திருக்கிறார் முதியவர். பெண்ணை அழைத்துப் போவது என்றால் அந்தப் பணத்தை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கறாராகச் சொல்லி இருக்கிறார்கள்.

பின்னர் ஊர் மக்களிடம் சமாதானம் பேசி அந்தப் பெண்ணை மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் போலீசார். இதன் பின்னர் அந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தன் மனைவியையே விற்ற சம்பவம் பலங்கிர் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #smartphone

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button