அரசியல்
Trending

மூளைச்சலவை செய்வோரை கேட்டு நடப்பது கட்சிக்கு செய்யும் துரோகம்!! – விஜயகாந்த்

மூளைச்சலவை செய்வோரின் பேச்சு மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்” என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; “எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; அதற்காக, தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்.

கட்சியை விட்டுச் செல்பவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும். மூளைச்சலவை செய்வோரின் பேச்சு, ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்.

100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். கழகம் நிச்சயம் வேரூன்றி இருக்கும். கழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #விஜயகாந்த் #தேமுதிக #DMDK #தமிழ்நாடு #TamilNadu

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button