கரண்ட் வைத்த கம்பி வலையை அகற்றிய வனவருக்கு விரல்கள் கட்
விலங்குகளை வேட்டையாட வைத்த கம்பி வலையில் மின்சாரம் இணைத்தது தெரியாமல் அகற்றச் சென்ற வனவரின் கை விரல்கள் துண்டானது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சிலர் கம்பி வலை விரித்து உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனவர் வெங்கட்ராமன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். நீப்பத்துறை அருகே வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் கம்பிவலை வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அதில் மின்சாரம் இணைக்கப்பட்டதை அறியாமல் அதை அகற்றச் சென்ற வனவர் வெங்கட்ராமனுக்கு மின்சாரம் தாக்கியதில் இடது கையின் ஐந்து விரல்களும் துண்டானது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் மின்சார கம்பி வலையை வைத்த மர்ம நபர்களை வனத்துறையினர் மற்றும் செங்கம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.