செய்திகள்

பட்டப்பகலில் கொலை: காதலால் விபரீதம்

மனைவியின் முன்னாள் காதலன் கொலை – நண்பர்களின் உதவியோடு கணவன் வெறிச்செயல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை (34). இவர் காதலித்த அதே ஊரைச் சேர்ந்த பெண்ணிற்கு மருது என்பவருடன் திருமணம் நடந்தது.
சாமிதுரைக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணமானது. இதில், சாமிதுரைக்கும் மருதுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கவும் முயற்சித்தனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண, வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று (திங்கள்கிழமை) காலை இரு தரப்பையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.
இந்நிலையில் மருது மற்றும் அவரது நண்பர் என இருவரும் சேர்ந்து வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்திருந்த சாமிதுரையை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தப்பியோட முயற்சித்த சாமிதுரையை பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டியுள்ளனர். இதில் சாமிதுரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார் சாமியாரின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் தலைமறைவான மருது மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் கொடூரமாக நடந்த இக்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் ரியாஸ், திண்டுக்கல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button