செய்திகள்

எலிக்கு வைத்த விஷம்: பலியானது கல்லூரி மாணவி

பொள்ளாச்சி அருகே எலிக்காக விஷம் தடவி வைத்த கேரட்டை தெரியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள செங்குட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் தேவசித்து, கிரேஸி தம்பதியர். இவர்கள் அங்கு மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் (வயது 19), பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம்தேதி வீட்டில் இருந்த ஜாக்குலின் பசிக்கிறது என்று கூறியபோது, நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடும்படி அவரது அம்மா கூறியுள்ளார். மளிகை கடையில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் கேரட்டில் பூச்சி மருந்து தெளித்து வைத்துள்ளனர். இதை அறியாத ஜாக்குலின் மருந்து தெளித்த கேரட் ஒன்றை எடுத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜாக்குலின், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button