செய்திகள்

பழங்குடியினருக்கு பயிற்சி

பழங்குடியினருக்கான
நூற்புழு மேலாண்மை பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பழங்குடியினருக்கான நூற்புழு மேலாண்மை பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள பாலமலை கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 100 பழங்குடி இனத்தை
சேர்ந்த விவசாயிகள் பயிற்சி பெற்றனர். இவர்கள் வாழை, ராகி, கொத்தவரங்காய்
போன்றவற்றை பயிர் செய்கின்றனர்.
இந்த பயிற்சியை உதவி பேராசிரியர் முனைவர் சுவர்ணகுமாரி வரவேற்புரையுடன் தொடங்கினார். அவர் அகில இந்திய திட்டம் பற்றி கூறியதுடன் மத்திய அரசின் பழங்குடி மக்களுக்கான சிறப்பு திட்டம் பற்றியும் விளக்கினார். அதன்பின் உதவி பேராசிரியர் முனைவர் பிரபு நூற்புழு மேலாண்மை முறைகளை எடுத்துரைத்தார். காடுகளை பாதுகாக்கும் முறைகளையும் மண்வளம் பேணும் முறைகளையும் முன்னோடி விவசாயி
மரியா பிரான்சிஸ் விளக்கினார்.
இந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, விதைகள் மற்றும்
உயிர்கொல்லி பூஞ்சாணம் (போக்கோனியா கிளாமிடோஸ்போரிய) வழங்கப்பட்டது.
கோவை வேளாண் பல்கலையின் நூற்புழுவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சாந்தி இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியின் இறுதியாக பொன்னுசாமி மற்றும் கோவிந்தராஜ்
நன்றி கூறினர். பழங்குடி விவசாயிகளின் விவரங்களை சேகரித்த பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button