செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம் 22ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அலகு குத்துதல் நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்களுக்கு சேலத்தைச் சேர்ந்த குழுவினர் அலகு குத்தினர். பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு வகைளில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சந்தைப்பேட்டையில் துவங்கிய இந்நிகழ்ச்சி வெங்கட்ரமணன் ரோடு, உடுமலை ரோடு, சத்திரம் வீதி வழியாக கோவிலை அடைந்தது.
பக்தர்கள் அலகு குத்தி செல்வதைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் ஆய்வாளர்கள் ராமதாஸ், அரங்கநாயகி, சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்தனர்.
திருவிழாவின் முக்கிய அம்சமான மூன்று நாள் வெள்ளித் தேரோட்டம் வருகிற 9ம் தேதி துவங்குகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button