கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டத்தில் இன்று (08.06.2023) மாவட்ட ஆட்சியர் திரு துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள்,தென்காசி,ஆலித் நகர் அருகில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்(07.06.2023)அன்று,முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்அதனைத் தொடர்ந்து பருவமழைக்கு முன், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 7700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மகிழம்,வேம்பு,புளியன்,புங்கன்,நாவல்,சரக்கொன்றை போன்ற வகையை சார்ந்த இம் மரக்கன்றுகள் 24 மாத கால வளர்ச்சியுடையவை என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் இராஜசேகர்,உதவி பொறியாளர் பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button