கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணை மூலம் பாசனம் பெறும் பரந்தாமன்குளம் மற்றும் நைனா குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளது. இந்த இரு குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது தொடர் மழை காரணமாக பரந்தாமன் மற்றும் நைனாகுளம் நிரம்பி அதனுடைய குளக்கரைகள் உடைந்தன. இதனால் பொட்டல் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி அணைக்கரை செண்டு கூறுகையில்தற்போது இந்த பகுதியில் நான் 10 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். தொடர் மழை காரணமாக குளக்கரைகள் உடைந்து நெல் பயிர்கள் அழுகின ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது அனைத்து நெல்பயிரும் சேதமானது எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் , என்னை போல் பல விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நெல்பயிர்கள் சேதமானது என்றார்.தொடர்ந்து தகவல் அறிந்த பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நெல் சேதங்களை பார்வையிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரவிந்தராஜ், மாடசாமி, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், முருகேசன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
1 week ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
September 5, 2020
தென்பெண்ணை ஆற்றில் துணை முதலமைச்சர் ஆய்வு
December 3, 2024
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
September 12, 2024
பள்ளியில் தேசிய கணித தின விழா
December 22, 2024