கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணை மூலம் பாசனம் பெறும் பரந்தாமன்குளம் மற்றும் நைனா குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளது. இந்த இரு குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது தொடர் மழை காரணமாக பரந்தாமன் மற்றும் நைனாகுளம் நிரம்பி அதனுடைய குளக்கரைகள் உடைந்தன. இதனால் பொட்டல் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி அணைக்கரை செண்டு கூறுகையில்தற்போது இந்த பகுதியில் நான் 10 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். தொடர் மழை காரணமாக குளக்கரைகள் உடைந்து நெல் பயிர்கள் அழுகின ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது அனைத்து நெல்பயிரும் சேதமானது எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் , என்னை போல் பல விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நெல்பயிர்கள் சேதமானது என்றார்.தொடர்ந்து தகவல் அறிந்த பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நெல் சேதங்களை பார்வையிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரவிந்தராஜ், மாடசாமி, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், முருகேசன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Read Next
செய்திகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
விமர்சனங்கள்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
4 weeks ago
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
4 weeks ago
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
Related Articles
புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….
April 17, 2024
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஐந்து பேர் பலி
October 23, 2020
ஏராளமான காவல் துறையினர் குவிப்பு
November 25, 2024
போதை காளான் விற்பனை செய்த நபர் கைது
July 26, 2024
Check Also
Close
-
மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடல்.May 15, 2024