ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உதவி
December 2, 2024
ஆற்றில் அடித்து வரப்பட்ட முதியவர்
December 6, 2024
பயிர் சேதங்களை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர்.
December 8, 2024
Check Also
Close