கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணை மூலம் பாசனம் பெறும் பரந்தாமன்குளம் மற்றும் நைனா குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளது. இந்த இரு குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது தொடர் மழை காரணமாக பரந்தாமன் மற்றும் நைனாகுளம் நிரம்பி அதனுடைய குளக்கரைகள் உடைந்தன. இதனால் பொட்டல் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி அணைக்கரை செண்டு கூறுகையில்தற்போது இந்த பகுதியில் நான் 10 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். தொடர் மழை காரணமாக குளக்கரைகள் உடைந்து நெல் பயிர்கள் அழுகின ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது அனைத்து நெல்பயிரும் சேதமானது எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் , என்னை போல் பல விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நெல்பயிர்கள் சேதமானது என்றார்.தொடர்ந்து தகவல் அறிந்த பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நெல் சேதங்களை பார்வையிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரவிந்தராஜ், மாடசாமி, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், முருகேசன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
Check Also
Close
-
தங்கக் கட்டி கடத்தலில் கோஷ்டி மோதல்.October 1, 2020
