ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்
December 5, 2024
பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு
December 4, 2024
அபூர்வ சகோதரர்கள் எனும் ஆச்சர்யம்
November 10, 2021
Check Also
Close