ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நாளை முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
February 17, 2025
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்
April 18, 2024
வாணியம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையில் கொள்ளை
August 28, 2020
Check Also
Close
-
40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?December 2, 2024