ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
செல்லுமிடம் எல்லாம் அண்ணாமலைக்கு கருப்புக்கொடி: அதிமுக போஸ்டர்
August 26, 2024
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
November 29, 2024
கழிப்பறைகளில் கதவு இல்லாத அவலம்
November 22, 2024
வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது
April 17, 2025
Check Also
Close
-
பல்வேறு இடங்களில் சாரல் மழைNovember 23, 2024