செய்திகள்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பணிகள் துவங்கியதாக அறிவிப்பு.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் எவ்வளவு நடந்துள்ளது என்பது குறித்தும் போட்டோக்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.

தென் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் 4-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை சமன் செய்து வாஸ்து பூஜை நடந்தது.

ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button