ஆன்மீகம்செய்திகள்
Trending

அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் இருந்தது.

இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் , ருத்ர பாகம் என மூன்று பாகங்களையும், பிற்கால சோழர்கள் காலப் பாணியில் ஆவுடையில் நான்கு வர்க்கம் வைத்தும், லிங்க பானத்தின் தலைப் பகுதி அரைக் கோள வடிவில் இருந்தது.

லிங்க பானத்தின் தலைப்பகுதியான ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன் இருந்தது.

இதனை கண்டறிந்த கோவையை சேர்ந்த அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள், அரசமரத்துக்குள் சிக்கியிருந்த சிவலிங்கத்தை மீட்டு, மேற்கூரை ஒன்றை அமைத்து வழிபாட்டிற்கு ஏற்ப பீடங்கள், புதிதாக நந்தியம் பெருமான் வழங்கி ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button