அரசியல்கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கும் குஜிலியம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

அந்தப் பெண்ணிற்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத போது பாலுபாரதி 10 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.

அப்போது தனக்கு நடந்தவற்றை சிறுமி கண்ணீருடன் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா பாலுபாரதியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி : கதிரேசன் – மாவட்ட செய்தியாளர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button