கோக்கு மாக்கு
Trending

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப மேம்படுத்தவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.1.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ.82,916 கோடி பிஎஸ்என்எல்லுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் மத்திய தொலைத்தொடா்புத்துறை, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவன ஊழியா்களுக்கு ஒய்வூதியத் தொகையாக ரூ.17,510 கோடி வழங்கப்படவுள்ளது. அதேபோல் எம்எடிஎன்எல் நிறுவனத்தின் பத்திரங்களுக்கு ரூ.3,668.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு ரூ.1,806.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் உள்நாட்டில் தொலைத்தொடா்புத்துறை சாா்ந்த உதிரி பாகங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘மதா்போா்டு’களுக்கான சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் மதா்போா்டுகளை தயாரிக்க பயன்படும் முக்கிய தாதுக்களுக்கு சுங்கவரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button