கோக்கு மாக்கு
Trending

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ராஜா(38) என்பவரை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அவர்களின் அறிவுறுத்தலின்படி அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி நீதிமன்ற தலைமை காவலர் திருமுருகன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 26.07.2024-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முத்துப்பாண்டி ராஜா என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 8,000/- அபராதமும் விதிக்கப்பட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button