கோக்கு மாக்கு
Trending

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடியில் கனிமொழி MP குற்றச்சாட்டு

மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனட்டி அரசாங்க அமர்ந்துள்ளது இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார் ஆந்திரா தலைவர்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளதாக தூத்துக்குடி திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற குழு திமுக தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி குற்றம் சாட்டினார்.

கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்ததாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார் இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசும்போது

பாஜகவினர் காதுகாளில் தமிழ்நாட்டில் என்ன குரல் எழும்புகின்றது என்று கேட்கும் நிலைதான் உள்ளது எனவே முதல்வர் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் டெல்லியில் இருக்ககூடியவர்கள் காதுகளில் கேட்டு அங்கு இருக்கக்கூடிய அரசின் அடிதளத்தை அசைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார்.மேலும் மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த மத்திய அரசு தற்போது மைனாரிட்டி அரசாக அமர்ந்துள்ளது இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார் ஆந்திரா தலைவர்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும்
ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது என்ற கனிமொழி

இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக நினைத்து பாஜக தலைமையிலான மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்து உள்ளனர்.
பீகாராக இருக்கட்டும் ஆந்திராவாக இருக்கட்டும் இரண்டு மாநிலங்களுக்கும் நிதி அளித்து அந்த மாநிலங்களை முன்னேற்றுவதில் எங்களுக்கு எந்த கருத்துக்களும் கிடையாது.

ஆனால் முதல்வர் சொன்னதுபோல பணத்தை அறிவித்து உள்ளனர் ஆனால் வருமா வராதா என்று யாருக்கும் தெரியாது.

பாஜக பட்ஜெட் தாக்கலால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை அம்பானி,அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பயனாக உள்ளது.
அம்பானிகானிகளுக்கும், அதானிகளுக்கும் மட்டுமே பயன் உள்ள பட்ஜெட்களை போட கூடியவர்களாக இல்லாமல் சாதாரண சாமானிய கிராமபுற மக்களை பற்றி கவலைபடகூடிய ஆட்சியை விரைவில் உருவாக்கி காட்ட வேண்டும் என்றார்

தேர்தல் நேரத்தில் 10-முறை தமிழகம் வந்த பிரதமர் பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு எந்த அறிவிப்பையும் அளிக்கவில்லை.
தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button