கோக்கு மாக்கு
Trending

“கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள நெலாக்கோட்டை பீட்டிற்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்துகிடப்பதை பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

உயிரிழந்த இரண்டு புலிகளின் தலையில் காயமும், ரத்தக் கசிவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு புலிகளின் உடலில் இருந்து முக்கிய பாகங்கள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பின்னா் அதே இடத்தில் புலிகளின் உடல்கள் எரியூட்டப்பட்டன.”

கூடலூர் வனக்கோட்டத்தில் இறந்த இரு புலிகள் தொடர்பான முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை
இரண்டு புலிகள் இறந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்து இருப்பதை விசாரணை குழு கண்டறிந்தது.

பின்பு அங்கு சென்று பார்த்த பொழுது அந்த இறந்த காட்டுப்பன்றி உடல் அருகில் இரண்டு புலிகளின் கால் தடங்கள் இருப்பது காணப்பட்டது.

அதை இறந்த இரு புலிகளின் கால் தடையங்களை வைத்து சரி பார்க்கப்பட்டது. கால் தடையங்கள் ஒன்று போல் இருந்ததையும் பார்க்கப்பட்டது.

மேலும் காட்டுப்பன்றியின் உடலை முக்கால்வாசி புலிகள் சாப்பிட்டதாக தெரியவந்தது. புலியின் வயிற்று பகுதியில் சிறிதளவு இருந்தது. அதை மருத்துவர் பார்க்கும் பொழுது அதில் அரிசி, மரவள்ளி கிழங்கு போன்றவை இருந்ததில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது.

பின்பு இரண்டு புலிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது புலிகளின் வயிற்றுக்குள் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்ததே பார்க்கப்பட்டது. மேலும் இரண்டு புலிகளின் உள் உறுப்புகளை பார்க்கும் பொழுது விஷத்தினால் இறந்திருக்க கூடும் என மருத்துவர்களால் அறியப்படுகிறது. இதிலிருந்து பார்க்கும் பொழுது விஷத்தினால் இரு புலிகள்
இறந்திருக்க கூடும் என்று தெரிய வருகிறது. காட்டுப்பன்றி ஏதாவது விஷம் கலந்த உணவினை சாப்பிட்டு அந்த காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால் காட்டுப்பன்றி மற்றும் புலிகள் இறந்து இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். மேலும் வன உயரின வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அந்த பகுதிகளில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் இரு சரகர்கள் தலைமையில் வனப்பணியாளர்களை குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையும், தேடுதல் பணியும் நடந்து வருகிறது. உதவி வனப்பாதுகாவலர், வனப்பதுகாப்பு படை, நீலகிரியும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார் என வனத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button