கோக்கு மாக்கு
Trending

திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமணி மகன் சிவகுமார், 29; இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி அதே ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது.

இது குறித்த தகவல் அறித்த சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலர் சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இத்தம்பதிக்கு தற்பொழுது இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button