
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார்பு ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் கீழப்பாவூர் சென்று சோதனை நடத்தினர்.
பின்னர், மது விற்பனையில் ஈடுபட்ட கீழப்பாவூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த தங்கசாமி(45) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ. 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.