
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரான்சிஸ் தீபா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூர் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த சென்னை பதிவு எண் கொண்ட சிவப்பு நிற காரை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து கார் மற்றும் காரில் இருந்த 250 குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து காரை நிறுத்தி வைத்த மர்ம நபர் யார்? செம்பட்டி சித்தையன் கோட்டை ஆத்தூர் பகுதியை சேர்ந்த நபருடன் தொடர்பு உடையவர்களா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்