M. க

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா, மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசராக பணியாற்றும் நிலையில், கோழி பண்ணையும் நடத்தி வருகிறார். இவரிடம் கடையத்தை சேர்ந்த உதய சூரியன் மகன் அரவிந்த் என்பவர் ஆயிரம் கோழி குஞ்சுகள் வேண்டி ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நீண்டகாலமாக கோழி குஞ்சுகள் கொடுக்காமலும், அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுக்காமலும் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரவிந்த் கடையம் போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பட்டாலியன் போலீஸ் சுப்பையா மீது மிரட்டல், கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது..