
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திரு குற்றால நாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பல கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் காலி மனை கடைகள், கட்டடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்து வருகிறது.
ஆனால் அதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபர்கள் குத்தகைத் தொகையை ஒழுங்காக செலுத்தாமல் கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள் .
அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி மாவட்டம் திரு குற்றாலநாத சுவாமி திரு கோவிலுக்கு சொந்தமான பாட்ட பத்து கிராமம் பல்வேறு புல எண்களில் உள்ள மொத்தம் நன்செய் & புன்செய் நிலங்கள்170 ஏக்கர் 59 சென்ட் திரு குற்றாலநாதசுவாமி பாட்ட பத்து கூட்டுறவு விவசாயிகள் பண்ணை சங்கத்திற்கு சாகுபடி செய்து குத்தகை செலுத்தும் வகைக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

மேற்படி குத்தகைக்கு விடப்பட்டிருந்த பண்ணை சங்கம் குத்தகை சரி வராமல் செலுத்தாமல் இருந்து வந்தது. அது சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு திரு குற்றால நாத சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தில் இருந்து திருநெல்வேலி வருவாய் நீதிமன்றத்தில்PT வழக்கு எண்18/2015 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 0.1926 திரு குற்றால நாதசுவாமி பாட்ட பத்து கூட்டுறவு விவசாயிகள் பண்ணை சங்கத்தினை வெளியேற்றி திருக்கோயில் நிலங்களை சுவாதீனம் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
மேற்கண்ட உத்தரவின் படி இன்று (28.05.2026) காலை திரு குற்றாலநாத சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் திரு. கா. ஆறுமுகம், தென்காசி இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் ( ஆலய நிலங்கள்), பாட்ட பத்து கிராம நிர்வாக அலுவலர், இந்து சமய அறநிலைத்துறை நில அளவையர்கள், திருக்கோயில் அறங்காவலர் உறுப்பினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர்கள் மூலம் மேற்கண்ட நிலங்களில் இருந்த 0.1926 திரு குற்றால நாத சுவாமி பாட்ட பத்து கூட்டுறவு விவசாயிகள் பண்ணை சங்கம் வெளியேற்றப்பட்டு இன்று திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
மேற்படி சுவாதீனம் எடுக்கப்பட்ட திரு குற்றாலநாத சுவாமி திருக்கோயில் நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.3,00,75,000/- இருக்கும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.