கோக்கு மாக்கு
Trending

மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் (TN – 172 / 2008) 2008 -ம் ஆண்டு 13 நபர்களை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் ஆகும்.

இதன் தலைவராக மாவட்ட ஆட்சியரும் , துணை தலைவராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் ,செயலாளராக மாவட்ட கால்நடை துறை அதிகாரியும் உள்ளனர் .

நிர்வாக செயலாளராக இருந்து இந்த சங்க செயல்பாடுகளை திண்டுக்கல் கால்நடை பன்முக மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி (உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை) ஒருங்கிணைக்கிறார்.

இந்த விலங்குகள் வதை தடுப்பு சங்கம் என்ன தான் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டாலும் நிழல் மனிதர்கள் போல் யார் கண்ணிலும் சிக்காமல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளை கடந்து தற்போது 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்களை கண்காணிக்கவும் , செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விலங்குகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆகியவை உண்டு. திண்டுக்கல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க செயல்பாடுகள் அனைத்தையும் இந்த பொதுக் குழு செயற்குழு தீர்மானம் மூலம் மட்டுமே நடைமுறைபடுத்த வேண்டும் என சட்டவிதிகள் உள்ளன.

மாவட்ட ஆட்சி தலைவருக்கு விபூதி அடித்த கதை :-

இங்குதான் முறைகேடு ஆரம்பிக்கின்றது. பல ஆண்டுகள் பதிவு புதுப்பிக்காமல் , பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அந்த அந்த காலகெடுவுக்குள் கூட்டாமல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க அமைப்புகளுக்கான விதிகளை முறையாக பின்பற்றாமல் கடந்த 13 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யவிட்டது என அடுக்கிக் கொண்டே போகலாம் .

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சங்க நிர்வாக செயலாளர் (திண்டுக்கல் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சரவணகுமார்) பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சி தலைவர் 9 பேருக்கும் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார் (செ.ந.க.எண் – 3867/ஆ4/2023 தேதி :- 00.04.2025 என குறிப்பிடப்பட்ட கடிதம்).

இந்த உத்தரவு எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கால்நடை பராமரிப்பு துறையின் சுய விருப்பத்தின் பேரில் (சிலருக்கு அவர்களது 13 ஆண்டு கால பணியிடத்தையே உட்கோட்டம் என குறிப்பிட்டு முறைகேடு செய்துள்ளனர்) பொதுக்குழு செயற்குழு ஒப்புதல் பெறாமல் கடிதத்தில் தேதி கூட குறிப்பிடாமல் மறைத்து மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்து வாங்கி அனைவருக்கும் வழங்கியுள்ளனர். இ

இது குறித்து விசாரித்த போது இந்திய விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள் இல்லாமலும் பல ஆண்டுகளாக அதுவும் தற்போது மத்திய மாநில விலங்குகள் நலவாரிய அங்கீகாரம் இல்லாத தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு ஆமாம் சாமி போடும் நபர்களை மட்டும் கண்காணிப்பு குழுக்களில் (பொதுக்குழு மற்றும் செயற்குழு) வைத்துக் கொண்டு கால்நடை பராமரிப்பு துறையின் அதிகாரிகள் விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தை தவறாக வழிநடத்தி செல்வதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர் உரிய விசாரனை மேற்கொண்டு மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தை தவறாக வழிநடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சங்கத்தை சிறப்பாக வழிநடத்தும் பொருட்டு மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தித்திற்கான சட்டவிதிகளின் படி தகுதியான நபர்களை பொதுக் குழு மற்றும் செயற்குழுவில் நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button